Saturday 23 January 2016

ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகிறதாம்......

அரசியல் கட்சியினைப்பற்றி குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சிந்திக்கும் சிலர் அரசியல் அனுபவங்களையும் ஒரு கிணற்றுத்தவளைபோலவே காண்கின்றனர். சிறந்த தொண்டர்களாக இருக்கும் இவர்களின் சிந்தனைகள் குறித்தவொரு வட்டத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் சுழல்கின்றன. 

ஒவ்வொரு பிரதேசவாதியும் தமது பிரதேசங்களை மட்டுமே சிந்திக்கின்றனர், ஆனால், அரசியல் கட்சியின் தலைமை எப்போதும் நாடுதழுவிய ரீதியிலேயே மக்களைப்பற்றி் சிந்திக்கும். அத்தோடு தமது கட்சியின் எதிர்காலத்தினையும், அதன் வளர்ச்சியினையும் கருத்திற்கொண்டே செயற்படும். கட்சியின் வீழ்ச்சிக்கு எவ்வகையிலும் துணைபோகாதவாறு வழிநடாத்துவதே தலைமைக்குள்ள திறமையும், அறிவாற்றலும் சிந்தனா சத்தியுமாகும். இவற்றை மக்கள் புறிந்துகொள்வதில்தான் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் நடுநிலையாக சிந்திக்கவேண்டும். அப்படி நடுநிலையாக நிந்திக்கின்றவர்களை ஏனைய கட்சித் தொண்டர்களும், குண்டர்களும் பிரதேசவாதக் கருத்துக்களையும் போலி வாதங்களையும் முன்வைத்து அவர்களை திசைதிருப்ப முனைகின்றனர். இந்தநேரத்தில்தான் கட்சிபற்றி பொதுவாக சிந்திக்கவேண்டும். தமது கட்சி எதற்காக இவ்வாறு செய்தது என்று விரிவான சிந்தனையை நமக்குள்ளேயே உருவாக்கி ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும். தமது வேகத்துடன் விவேகமும் இருக்கவேண்டும். அதுதான் ஒரு சிறந்த தொண்டனுக்குரிய சிறப்பம்சம்.

“ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை”போல் சிலரின் செயற்பாடுகள் அமைந்திருக்கிறது. அதாவது முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களின் சுயமான சிந்தனையைக் கூட தடுத்து வேறுவகையில் திசைமாற்ற எத்தனிக்கின்ற மாற்றுக்கட்சி நரிக்கூட்டங்களின் தந்திரங்களை அறிந்துகொள்ளவேண்டும். தேசியப்பட்டியலால் பாதிக்கப்பட்ட எமதூர் மக்களுக்கு மனதிலே கவலை இருக்கத்தான் செய்யும் ஆனால் அத்தேசியப்பட்டியல் எதற்காக கிண்ணியாவுக்குச் சென்றது என்பதை நாம் அலசி ஆராய்ந்து சிந்திப்பது ஒவ்வொரு தொண்டருக்கும் கடமை எனலாம்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை எனும் மூன்று மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் அம்பாறை மாவட்டத்தில் திரு.மன்சூர், திரு.பைசல் காசிம், திரு.ஹரீஸ்  போன்றோரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் திரு. அலிசாஹிர் மௌலானா அவர்களும் இருக்கின்றனர். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எவருமில்ல! இந்நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்சிரஸ் என்ற கட்சிக்கே இடமில்லாமல் ஒரு மாவட்டத்தையே இழக்க நேரிடலாம். அங்கிருக்கின்ற மக்களும் அல்லல்பட்டு தமது உரிமைகளை இழக்க நேரிடலாம். இவற்றைப் பயன்படுத்தி ஏனைய கட்சிகள் உள்நுழைந்துகொள்ளும். என்ற அச்சம் நிலவியது. இக்கால கட்டத்திலேதான் அதிகமாக முஸ்லீம்களைச் சுமந்திருக்கின்ற கிண்ணியாவிலே சுமார் 27000வாக்குகளைப் பெற்ற திரு.M.S.தௌபீக் அவர்களை கட்சி முடிவெடித்தது. இம்முடிவானது முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால வளர்ச்சியையும், வீழ்ச்சியடையாத தன்மையினையும் கருத்திற்கொண்டே எடுக்கப்பட்டது எனலாம்.

சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு தொண்டரும் சுயமாகச் சிந்திக்கவேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம். உங்களது சிந்தனைகள் பரந்துபட்டதாக இருக்கவேண்டும். பிரதேசவாதங்களைவிட தனி ஒரு மாவட்டம் அநாதையாவதைப்பற்றி தீவிரமாகவும், நடுநிலையாகவும் யோசிக்கவேண்டும். அறிவாற்றலும் அனுபவமும் நிறைந்த எமது முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ தலைவர் நடுநிலையாக நிந்தித்திருக்கின்றார். அதேபோல் இரண்டு அமைச்சுக்களை எமது அம்பாறை மாவட்டத்திற்கே கொடுத்திருக்கின்றார். அத்துடன் மாகாண சுகாதார அமைச்சை எமது பிரதேசத்திற்குள்ளேயே வடிவமைத்திருக்கின்றார். இதுபோலவே, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சைப் பரிசளித்திருக்கின்றார். இப்படி ஒவ்வொன்றையும் மக்களுக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் செதுக்கிய சிந்தனை சிற்பியின் வியுகத்தை அனைவரும் தெரிந்து தெளிந்துகொள்ளவேண்டும்.

ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களில் சிலர் எதற்காகப் பிரிந்து சென்றார்கள் என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தால் அவரவரின் தனிப்பட்ட சுயஇலாபத்திற்காகவும், தலைமைத்துவப்போட்டி காரணமாகவுமே கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிகளை அமைத்துக்கொண்டனர் என்பதனை தெளிவாக அறிந்துகொள்வதே எமது தெளிந்த சிந்தனைக்கு உரம்போன்றது.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும், மாற்றுக்கட்சிக் குள்ளநரிகூட்டங்கள் பிரதேசவாதத்தைக்கூறி வடிக்கின்ற முதலைக் கண்ணீரின் தந்திரவலைக்குள் விழுந்துவிடாமல் சமூகத்தின் விடியலை நோக்கிப் பயணிக்கும் நமது கட்சியின் முன்னேற்றத்திற்கு விழுதுகளாக பலம்கொடுப்போம்.

-நன்றி-

0 comments:

Post a Comment