Friday 22 January 2016

எச்சரிக்கை!! பாதுகாப்பே முதன்மை!


தற்காலத்தில், மனிதன் இயந்திரம்போல் மாறிவிட்டான். அவனது தேவைகளும் பொறுப்புக்களும் அதிகரித்தமையே இதற்கு காரணம் எனலாம். தமது வேலைப்பழு காரணமாக தூங்குவதற்கு நேரமின்றி, தனது அயலவர்-சொந்தங்களுடன் உறவாடுவதற்கு நேரமின்றி, தமக்குப்பிடித்த உணவுகளை சுத்தமாக சமைத்துச் சாப்பிட நேரமின்றி அல்லலுடன் தமது வாழ்வுச் சக்கரத்தை உருட்டிச் செல்கின்றான். கடைகளிலோ, எப்படிப்பட்டவர் என்று அறியாதவரிடமெல்லாம் உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றான். இதனால் தோல் நோய்முதல் அனைத்து நோய்களும் தேவையற்ற வகையில் அவனுக்கு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றான். சிலவேளைகளில் உயிரை மாய்த்துக்கெள்கின்ற ஆபத்தான நோய்களுக்கும் ஆளாகின்றான்.

“தாயும், தந்தையும் எய்ட்ஸ்நோயற்றவர்கள் ஆனால் எந்தவித கெட்டபழக்கங்களும் இல்லாத பிள்ளைக்கு எயிட்ஸ்!” 

“பாடசாலை மாணவர்களுக்கு எயிட்ஸ்!”

“பெற்றோர்கள் வைத்தியர்கள், பிள்ளைகளுக்கு எயிட்ஸ்”

“வைத்தியருக்கே எயிட்ஸ்”

இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி ஊடகங்களினூடாக அறிந்துகொள்கின்றபோது எமக்குள்ளே அவர்களைப்பற்றி பாலியல் சம்மந்தமான தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்திக்கொள்கின்றோம். எயிட்ஸ் என்பது முறையற்ற பாலியல் தொடர்பினால் வருவது மட்டுமல்ல, முறையற்ற உணவுப்பழக்கத்தி்னாலும் வருகிறது!

அதிலும் குறிப்பாக பேரூந்து, தொடரூந்து (பஸ், ரயில்) மற்றும் ஏனைய பயணங்களின்போது உள்ளேயும், வெளியேயும் வெட்டி விற்கப்படுகின்ற மாங்காய், அன்னாசி போன்ற உணவுப்பொருட்களை நாம் வாங்கிச் சாப்பிடுகின்றோம். அதேபோல் மாணவர்களும் வெளியிலே வெட்டி விற்பனை செய்யப்படுகின்ற உணவுப்பொருட்களை கொள்வனவு செய்து உட்கொள்கின்றனர். விற்பனையாளியின் தன்மை, அவருக்கு எவ்வகையான நோய்கள் உள்ளன என்பதையெல்லாம் பொருட்படுவத்துவதே இல்லை இதனால் பாரிய நோய்களை எம்முடலினுள் நாமே எமக்குத் தெரியாமல் ஏற்றிக்கொள்கின்றோம். 

எப்படியெனில்.........

உதாரணமாக, மாங்காய், அன்னாசி போன்ற உணவுப்பொருட்களை வெட்டி விற்பவருக்கு எய்ட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அவர் வெட்டும்போது அவருக்குத்தெரிந்தோ - தெரியாமலோ இரத்தக் கசிவு ஏற்பட்டு அந்த இரத்தம், வெட்டப்படும் உணவுப்பொருளிலும் படிந்தால் அதனை உட்கொள்ளும் எமக்கும் அந்த எய்ட்ஸ பரவும் ஆபத்தான நிலை ஏற்படும். இதனால் நாம் எயிட்ஸ் நோயாளியாகின்றோம். இவ்வாறுதான் ஏனைய நோய்களும் பரவுகின்றன. 

பயணங்கள் செல்கின்றபோது உணவுப் பொருட்களை உங்களது வீடுகளிலே சமைத்து எடுத்துச் செல்வதே உங்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்புடையது என்பதை அனைவரும் அறிந்(துவைத்)திருத்தல் நல்லது.

பொருத்தமான வகையில் பரிசோதிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்ந்த ஏனைய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்வதனால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். 

இதேபோன்றுதான் தலைமுடி வெட்டுமிடங்கள்போன்ற இரத்தத்தோடு சம்மந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மிகுந்த பாதுகாப்புடன் செயற்படுதல்வேண்டும்.

“வெள்ளம் வருமுன்னரே அணை கட்டுவோம்” என்பது போல, நோய்கள் வருமுன்னரே பாதுகாப்பை மேற்கொள்வோம்.




நன்றி

0 comments:

Post a Comment