Thursday 14 January 2016

உலக வரலாற்றின் சமகால சகாப்தம்... பகுதி 3



தற்காலத்தின் பிந்தைய பகுதியிலான தீவிரவாதமும் போர்களும்

2000ங்களில் மேற்கு உலகிலும் மத்திய கிழக்கிலும் ஏற்பட்ட முக்கிய அரசியல் முன்னேற்றங்கள் சமீபத்திய தற்கால தீவிரவாதம், தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஆஃப்கானிஸ்தான் போர் மற்றும் ஈராக் போர் ஆகியவற்றையே மையமாகக் கொண்டுள்ளன.

உலக வர்த்தக மையத்தில் எரிந்த தீ மற்றும் சுதந்திர தேவி சிலை.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த செப்டம்பர் 11 தாக்குதல்கள், அல் கொய்தா அமைப்பினால் அமெரிக்க ஒன்றியத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களாகும். அன்று காலையில் 19 அல் கொய்தா தீவிரவாதிகள் வணிக ரீதியான பயணிகளுக்கான நான்கு ஜெட் விமானங்களைக் கடத்தினர். விமானத்தைக் கடத்தியவர்கள் நியூ யார்க் நகரிலுள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தை விமானம் கொண்டு மோதித் தாக்கினர். இத்தாக்குதலில் விமானப் பயணிகள் அனைவரும் உட்பட அந்தக் கட்டடத்தில் பணிபுரிந்துவந்தவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இரண்டு மணி நேரத்திற்குள் இரு கட்டடங்களும் தரைமட்டமாயின, இதில் அருகிலிருந்த கட்டடங்களும் பிற இடங்களும் சேதமடைந்தன. கடத்தியவர்கள், மூன்றாவது விமானத்தை வாஷிங்டன் D.C. க்கு புறத்தேயுள்ள விர்ஜினியாவிலுள்ள (Virginia) ஆலிங்ட்டன் (Arlington) என்னுமிடத்திலுள்ளபெண்டகன் (Pentagon) கட்டடத்தில் மோதினர். நான்காவது விமானத்திலிருந்த ஊழியர்கள் மற்றும் சில பயணிகள் விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்க எடுத்த முயற்சியால் வாஷிங்டன் D.C. ஐ நோக்கி எடுத்துச் செல்லவிருந்த அதை ஊர்ப்புற சோமர்ஸ்ட் கண்ட்ரி, பெனிசில்வேனியாவிலுள்ள (Somerset County, Pennsylvania) ஷான்க்ஸ்வில்லி (Shanksville) என்னுமிடத்தில் மோதி விபத்துக்குள்ளாக்கினர். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகான பெரிய தீவிரவாத தாக்குதல்களில் மாஸ்கோ தியேட்டர் தாக்குதல் 2003 இஸ்தான்புல் குண்டுவெடிப்புகள் மாட்ரிட் இரயில் குண்டுவெடிப்புகள், பெஸ்லான் பள்ளி பணையக் கைதிகள் விவகாரம், 2005 இலண்டன் குண்டுவெடிப்புகள், 2005 ஆம் ஆண்டின் அக்டோபரில் நடந்த புது தில்லி குண்டுவெடிப்புகள் மற்றும் 2008 ஆம் ஆண்டின் மும்பை ஹோட்டலில் நடந்த தாக்குதல் ஆகியன அடங்கும்.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை அடுத்து அமெரிக்க ஒன்றியம் "தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரைத்" தொடங்கி தாலிபான்தீவிரவாதிகளை வெளியேற்ற ஆஃப்கானிஸ்தானில் (Afghanistan) புகுந்தது. தாலிபான் தீவிரவாதிகளே அல் கொய்தா தீவிரவாதிக்கு புகலிடம் அளித்து வந்தவர்களாவர். மேலும் நாட்டுப்பற்று சட்டத்தை மேம்படுத்தியது. பல பிற நாடுகளும் தமது திவீரவாதத்திற்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தி சட்ட அமலாக்க சக்திகளை மேம்படுத்தின. 'தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்' என்பது 2001 தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து நடத்தப்பட்டுவரும் இராணுவ, சட்ட ரீதியான, அரசியல் ரீதியான மற்றும் சித்தாந்த ரீதியான இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிரான போராட்டமாகும்.

குனார் மாகாணத்தில் அமெரிக்க ஒன்றிய இராணுவப் படையினர்
ஆஃப்கானிஸ்தான் போர் 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது, அதை அமெரிக்க ஒன்றியம் ஐக்கிய இராச்சியத்துடன் சேர்ந்து நடத்தியது, மேலும் அதை NATO-தலைமை தாங்கியது, UN அமைப்பும் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ISAF ஐ அங்கீகரித்தது. ஒசாமா பின் லேடன் (Osama bin Laden) மற்றும் பிற முக்கிய அல் கொய்தா உறுப்பினர்கள் எங்குள்ளனர் எனக் கண்டுபிடிப்பதும் அவர்கள் மீது வழக்குத் தொடுத்து அல் கொய்தா அமைப்பை முழுவதுமாக அழித்து, அல்கொய்தாவுக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளித்த தாலிபான் ஆட்சியை அகற்றுவதுமே ஆஃப்கானிஸ்தான் படையெடுப்பின் குறிக்கோள்களாகும். புஷ் நிர்வாகக் கொள்கை மற்றும் புஷ் தத்துவம் ஆகியவை, இப்படைகள் தீவிரவாதிகளையும் அவர்களை ஆதரிக்கும் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அமைப்புகள் மற்றும் நாடுகளையும் வேறுபடுத்திப் பார்க்காது எனக் கூறுகின்றன. ஆஃப்கானிஸ்தானில் உள்ள இரண்டு இராணுவ தரப்புகள் நாட்டின் ஆட்சிக் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற சண்டையிட்டுவருகின்றன. சுதந்திர ஆதரவு இயக்கம் (Operation Enduring Freedom) (OEF) என்பது அமெரிக்க ஒன்றிய போராட்ட இயக்கமாகும். அது ஒருங்கிணைந்த தரப்புகளுடன் இணைந்து தற்போது செயல்பட்டு வருகிறது. அது தற்போது பாகிஸ்தான் (Pakistan) எல்லையை ஒட்டிய ஆஃப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் செயல்பட்டுவருகிறது. சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை (International Security Assistance Force) (ISAF) என்பதை UN பாதுகாப்பு கவுன்சில் 2001 ஆம் ஆண்டின் இறுதியில் காபூலையும் (Kabul) அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கியது. 2003 ஆம் ஆண்டு ISAF இன் கட்டுப்பாட்டை NATO ஏற்றது.
ஆஃப்கான் வடக்குக் கூட்டணி வழங்கிய இராணுவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு காலாட்படை நடவடிக்கைகள் மற்றும் மேலிருந்து குண்டு வீசுதல் நடவடிக்கை ஆகியவற்றால் தாலிபனின் அதிகாரம் வீழ்த்தப்பட்டது, ஆனால் தாலிபான் படைகள் மீண்டும் ஓரளவு பலம் பெற்றுள்ளன. அல் கொய்தாவின் செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தப் போர் எதிர்பார்த்ததை விட சிறிதளவே வெற்றிபெற்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் தலைமை ஏற்று நடத்தும் அரசு எதிர்ப்பு நடவடிக்கைகள், சட்ட விரோத மருந்து உற்பத்தி, மற்றும் காபூலுக்கு வெளியே குறைந்த அளவே கட்டுப்பாடுள்ள பலவீனமான ஒரு அரசாங்கம் ஆகிய காரணங்களின் அதிகரிப்பால் நாட்டின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் நிலவிவந்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் முடிவில் இப்போர் ஒசாமா பின் லேடனைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்றது, மேலும் கூட்டுப் படையின் தாக்குதலின்போது பாக்கிஸ்தான் எல்லையைக் கடந்த தாலிபான் போராளிகள் தொடர்பான சம்பவங்களினால் அமெரிக்காவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரித்தது.

2007 ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று பாக்தாத்தின் அல் டௌரா பகுதியில் கலகத்தின் போது அமெரிக்க ஒன்றிய இராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சண்டை
2003 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பன்னாட்டுப் படை ஈராக் மீது படையெடுத்த சம்பவத்திலிருந்து இரண்டாம் வளைகுடாப் போர் தொடங்கியது.[15] ஈராக் படையெடுப்பால் ஈராக்கின் ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்து சதாம் உசேன் (Saddam Hussein) கைதும் நடந்தன, பின்னர் ஈராக் அரசு அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது. பல்வேறு பிரிவினர் மேற்கொண்ட கூட்டுப் படைகளுக்கு எதிரான வன்முறையால் வெடித்த ஈராக் கிளர்ச்சியால் சீரற்ற யுத்தம் தொடங்கியது. பல சுன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஈராக் பிரிவினருக்கும் ஈராக்கிலுள்ள அல் கொய்தா இயக்கத்திற்கும் மோதல் வெடித்தது. ஈராக் படைகள் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதால் படை திரும்பப் பெறுவதற்கான மக்கள் ஆதரவு அதிகரித்ததால் கூட்டுப் படையில் சேர்ந்திருந்த உறுப்பு நாடுகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றன. 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க ஒன்றியம் மற்றும் ஈராக் ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களும் படை ஒப்பந்த நிலையை ஏற்றுக்கொண்டன. அது 2011 ஆம் ஆண்டு இறுதி வரை அமலில் இருப்பதாகும்.[20] ஈராக் பாராளுமன்றமும் அமெரிக்க ஒன்றியத்துடன் ஒரு திட்ட ரீதியான செயல்திட்டத்தில் கையெழுத்திட்டது. அது அரசியலமைப்பு சார்ந்த உரிமைகள், அச்சுறுத்தல் எதிர்ப்புகள், கல்வி ஆகியவற்றிலான சர்வதேச ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர்பாரக் ஒபாமா (Barack Obama), "போர் படைகளுக்கான" இடைவேளையாக 18-மாத காலத்திற்கு படைகள் திரும்பப்பெறப்படும் என அறிவித்தார்.
ஒபாமா ஆட்சியில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயர் "அயல்நாட்டு தற்செயல் இயக்கம்" என மாற்றப்பட்டது. அமெரிக்கக் குடிமக்களையும் உலக அளவிலான வணிக ஆர்வத்தையும் பாதுகாப்பதும் அமெரிக்காவிலுள்ள தீவிரவாத முகாம்களை அழிப்பதும் அல் கொய்தா மற்றும் அதன் உதவி பெறும் அமைப்புகள் அனைத்தையும் தடை செய்வதுமே அதன் குறிக்கோள்களாகும். அவரது ஆட்சி ஈராக்கிலிருந்து அமெரிக்காவின் படைகளைத் திரும்பப் பெறுவது பற்றிய சர்ச்சைகள், குவாண்டனேமோ விரிகுடா தண்டனை முகாம் (Guantanamo Bay detention camp) மற்றும் ஆஃப்கானிஸ்தானிலான எழுச்சி (surge in Afghanistan) ஆகிய விவகாரங்களிலான அமெரிக்காவின் தலையீட்டில் மீண்டும் கவனம் செலுத்தியது.

தொடரும்...

0 comments:

Post a Comment