Wednesday 16 August 2017

சமுர்த்தியும் செல்வந்த ஏழைகளும்....

இன்று எமது கிராமத்திலே வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமூர்த்திக் கொடுப்பனவுகளை அவ் ஏழைகள் அனுபவிப்பதைவிட செல்வந்தர்களும், செல்வாக்கு உள்ளவர்களும், காக்கா பிடிப்பவர்களுமே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை!!

இவ்வாறு இலங்கை முழுவதுமே அலசிப்பார்த்தால் வசதிபடைத்த ஏழைகள்தான் அதிகமாக இதனை அனுபவிக்கின்றனர்... இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலேயே அரசாங்கம் இத்திட்டத்தினை சட்டத்தின் வரையறைக்குள் முழுமையாக கொண்டுவர முனைந்து பல தகவல்கள் அடங்கிய விதிமுறைக்கோவை ஒன்றைத் தயாரித்து நாடு முழுவதிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இது பல வழிகளில் சாதகமாக இருந்தாலும் சில அப்பாவி மக்களும் பாதிப்படைகின்றனர்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருந்து பொருத்தமான மக்களுக்கே இச் சமுர்த்திக் கொடுப்பனவுகளைக் கொடுக்கவேண்டும். இதில் பாரபட்சம் காட்டாது தமக்குத் தெரிந்தவர்கள், செல்வாக்குள்ளவர்கள் என்று பாராது ஏழைகளின் சொத்துக்களை அவர்களுக்கே சென்றடையுமாறு தமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது சாலச் சிறந்தது.

இன்னும் சிறிது நாட்களில் எமது ஊரில் யார் யாருக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன என்ற தகவல்களையும் இந்த இணையத்தளத்தில் பதிவிட முனைகின்றேன்......(தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில்)

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்திக் கொடுப்பனவு சம்மந்தமாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அடங்கிய சட்டக்கோவை












நன்றி

0 comments:

Post a Comment