Tuesday 13 September 2016

முகமூடி அரசியலும் சுதந்திர பேச்சுக்களும்


கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அவர்களின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு அதனுள் பன்றி இறைச்சி வீசப்பட்டு ஹபாயாக்கள் கேவலப்படுத்தப்பட்டு முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் தீயிடப்பட்டு அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு  நோன்புகாலங்களின் இறை வணக்கங்களை மேற்கொள்ளாது தடுக்க ”கிறீஸ் மனிதன்” உருவாக்கப்பட்டு இனத்துவேசத்தை உருவாக்க பொதுபலசேனா உருவாக்கப்பட்டு “சிங்க ளே” எனும் நாமங்கள் உச்சரிக்கப்பட்டு.........இப்படி எத்தையோ அநியாயங்கள் முஸ்லிம்களின்மேல் தினிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது....... எங்கே போய்விட்டது உங்களின் சமூக உணர்வு! சமூக அக்கறை!! சமூக சிந்தனை!!! தன் சமூக சுதந்திரம்!!! மக்களின் எழுச்சி!!!
அவ் ஆளும்கட்சியிலே தனது சமூகத்தைப்பற்றிய அக்கறையின்றி சிலைபோல் வாய்பேசாமல் சுயநலத்திற்காக குந்தியிருந்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் பங்கம்விளைவித்த அத்தலைமைத்துவத்தையே மீண்டும் கொண்டுவருவதற்கு இறுதிவரை கடும்முயற்சி செய்துகொண்டிந்தவர்கள் இன்று கிழக்கு முஸ்லிம்களின் எழுச்சிபற்றிப் பேசுவதும் கிழக்கின் சுதந்திரம்பற்றிப் பேசுவதும்தான் வேடிக்கையாக உள்ளது!!

இப்படியாக கடந்த ஆட்சியில்  முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் தீவிரமடைகின்றபோது ACMC  மற்றும் SLMC போன்ற மக்கள் நலக் கட்சிகள் அவ்வரசிடமிருந்து சமூகவிடுதலைக்காக பிரிந்தபோதும் இன்னும் சில மக்களின் பிரதிநிதிகள் தன் சமூக விடுதலையைக் கவனியாது சுயநல அரசியலுக்காகவே காத்திருந்ததையும் நாம்  அறியாமலில்லை!!

ஆட்சியும் அதிகாரமும் தம்மிடமிருக்கின்றபோது மக்களின் துயர் துடைக்க முன்வராதவர்கள் இன்று மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து மக்களின் எண்ணங்களை திசைதிருப்ப எத்தனிக்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளைவிட மக்கள் அரசியலில் அதீதி அனுபவம் கொண்டிருப்பதை சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.....

ஆனாலும் அறுந்துவிட்ட பல்லியின் வால்கள் துடிப்பது இயல்பே..... அதுபோல்தான் கடந்த ஆட்சியில் சுயநலத்தில் சுகபோகங்களை அனுபவித்த சிலரின் நிலமைகளும்...... 

மக்களுக்காகவே அரசும் அதன் பிரதிநிதிகளும் எனவே மக்களின் நலனில் ்அக்கறைகொண்ட அரசியல்வாதிகளை நாம் போற்றுகின்றோம். மாற்றமானவர்களை மக்களுக்காக சிந்திக்குமாறு தூண்டுகின்றோம்.

- நன்றி -

0 comments:

Post a Comment