Saturday 28 May 2016

கடற்படைச் சிப்பாயை இடம்மாற்றியது முழுமையான தீர்வல்ல!



எமது நாடு மாகாணங்களாகவும், மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவ்வதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் ஒப்புதலின் அடிப்படையிலேயே பிரையோகிக்கப்படுகின்றன. 

குறிப்பாக, மாகாண முதல்வர் (முதலமைச்சர்)  மக்களினால் தெரிவுசெய்யப்பட்டாலும் அம்முதல்வரின் செயற்பாடுகளுக்கு இறுதி அங்கீகாரம் வழங்குகின்ற அதிகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுணருக்கே உள்ளது என்பதுடன் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படுகின்ற ஆளுணரானவர் மக்களின் சேவையில் கவனக்குறைவாக இருந்தாலும் அவருக்கு எந்தப்பாதிப்புமில்லை. மக்களைப்பற்றிய சிந்தனையைவிட ஜனாதிபதிக்கு சேவை செய்வதே இவர்களின் நோக்கமாக இருக்கும். கடந்த ஆட்சியிலும் இதுவே நடந்தது! இது எமது நாட்டு ஜனாநாயகத்தில் உள்ள பெரும் குறையாகும்!

இன்றைய காலகட்டத்தில் மாகாண முதலமைச்சர் பதவி என்பது வெறும் பெயரளவில் மாகாணத்தை நிருவகிக்கின்ற ஒரு கௌரவ அமைச்சாகவே காணப்பட்டு வருகின்றது. மாகாண செயற்பாடுகள் அனைத்தும் ஆளுணரின் அதிகாரத்தின் கீழேயே செயற்படுவது மக்களின் இறைமைக்குப் புறம்பான செயலாகும்!  இவ்வாறு மாகாணத்தின் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுணரின் காலடியில் குவிந்துகிடக்கின்றபோது...... எப்பெயர்ப்பட்ட மக்களின் நலனை விரும்புகின்ற சேவைத்திலகமாக இருக்கின்ற முதலமைச்சர்கள் வந்தாலும் தமது சேவைகளை திறண்பட செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது!

இவ்வாறான செயற்பாடுகளின்மூலமே முதலமைச்சரினால் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை காரணமாக முதலமைச்சர் - ஆளுணர் ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு அற்ற தன்மை காணப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். மக்களுக்கான அபிவிருத்திகளும், மாகாண செயற்பாடுகளும் தரம் குன்றிக்காணப்படுதவற்கு இதுவே முதன்மைக்காரணமாகும். ஆளுணரின் பொடுபோக்கானதும் மதியாமை எனும் தன்மையினாலுமே கடற்படை சிப்பாயினால் கிழக்கின் முதலமைச்சர் அவமதிக்கப்பட்டதும் - கிழக்கின் முதலமைச்சரினால் கடற்படைச்சிப்பாய் அவமதிக்கப்பட்டதுக்குமான காரணமாகும்.

எனவே, கிழக்கு மாகாணத்தில் ஆளுணரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவ்வதிகாரங்கள் முழுமையாக மாகாண முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படுகின்றபோதுதான் மாகாணத்தின் சேவைகள் முழுமையாக மக்களைச் சென்றடையும் என்பதே யதார்த்தம்!

ஒரு பிரச்சினைக்கான அடிப்படைக்காரணத்தை சரி செய்யாமல் தற்காலிகமாகப் பிரச்சினையின் ஆரம்பத்தை மட்டும் கிள்ளிவிடுவதனால் ஓய்ந்துவிடாது. கடற்படைச் சிப்பாய் இடம் மாற்றப்பட்டது இப்பிரச்சினைக்கான முழுத் தீர்வல்ல! ஆளுணரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு கிழக்கின் முதலமைச்சரிடம் கொடுப்பதே முழுமையான தீர்வாகும்!!

நன்றி





0 comments:

Post a Comment