Friday 1 April 2016

ஆளுமையற்ற அதிபரினால் திசைமாறும் அபிவிருத்திகள்.......



“முதல் கோணல் முற்றிலும்கோணல்” என்பார்கள். அதேபோல்தான், ஒரு நிருவாகத்தலைவரின் பொடுபோக்கான தன்மையானது அந்நிறுவனத்தையே பாதிக்கின்றது.

இதற்கும் மேலாக சமூகத்தையே பிரதிபளிக்கின்ற பாடசாலையின் முகாமைத்துவமும் அதன் தலைவரும் பொறுப்புணர்ச்சியுடனும் தியாக மனப்பான்மையுடனும் செயற்படுகின்றபோதுதான் அப்பாடசாலையின் வளச்சி மென்மேலும் ஒங்கும் என்பதே யதார்த்தம்!! அவ்வாறின்றி சுயநலத்துடனும், பொறுப்பின்றியும், கவனக்குறைவாகவும் செயற்படுகின்றபோது அங்கே பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமல்ல, அப்பாடசாலையின் முன்னேற்றமும், அபிவிருத்தியும் என்பதுடன் ஒரு சமூகமே பாதிக்கப்படுகின்றது என்பதை அனைவரும் உணர வேண்டும்!!

பொறுப்புவாய்ந்த அதிபரினாலேயே ஒரு பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கமுடியும்!

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் அரசின் கொந்தம, லங்கம எனும் திட்டத்தின்கீழ் அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றபோதும் அப்பாடசாலையின் ஆளுமையற்ற அதிபரின் கவனயீனத்தினாலும், பொறுப்பற்ற தன்மையினாலும் கை நழுவிப்போகின்ற அபாயம் ஏற்படுட்டிருப்பதையிட்டு அக்கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதோடு இவ்வபிவிருத்தி நிதி திசை மாற்றப்பட்டால் பாடசாலை அதிபருக்கெதிராகவும், வலயக்கல்வி அலுவலகத்திற்கெதிராகவும் பெரும் போராட்டம் ஒன்று நிகழும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

கடந்த வருடம் இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் நிதியானது இவ்வதிபரின் பொறுப்பற்ற தன்மையினால் பயன்படுத்தாமல் திருப்பியனுப்பப்பட இருந்தபோதும் குறித்த சிலரின் விடாமுயற்சியினால் காலம் நீடிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


இவ்வாறு பாடசாலையின் அபிவிருத்தியில் கவனயீனத்துடனும் வேண்டாவெறுப்புடனும், பொறுப்பின்றியும் செயற்படுகின்ற குறித்த 1AB பாடசாலையின் தகுதியற்ற அதிபர், இன்னும் இப்பாடசாலையில் அதிபராக நிலைத்திருப்பாராயின் சிறிது காலத்துக்குள்ளேயே இப்பாடசாலை30 வருடங்கள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை!!

எனவே, இக்கிராமத்தின் நன்மை கருதியும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும், பாடசாலையின் முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் ஊக்குவிக்குமுகமாக  தற்போதைய ஆளுமையற்ற அதிபரை மாற்றி, பொருத்தமான ஆளுமையும் தகுதியுமுள்ள அதிபரை நியமித்துத் தருமாரு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் இதில் முழுக்கவனத்தையும் செலுத்தி குறித்த பாடசாலையின் அதிபரை மாற்றி கல்விக்கும் அபிவிருத்திக்கும் மற்றும் சமூக நன்மைக்கும் உரமூட்டுவார் என்பதை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

-நன்றி-

0 comments:

Post a Comment