Wednesday 23 August 2017

தகவல் அறியும் சட்டமும் எமது கிராமமும்


எமது கிராமத்தைப்பொறுத்தளவில் சிலர் தத்தமது சுயநலனுக்காக மக்களைக் காண்பித்து வயிறுவளர்க்கும் நோக்கில் தாமாகவே ஏதோ ஒரு வகையில் சங்கங்களையும், விளையாட்டுக்கழகங்களையும் பதிவுசெய்துவிட்டு அதற்கு தலைவராக அமர்ந்துகொண்டு கிடைக்கின்ற நன்கொடைகளால்  சுகபோக வாழ்க்கையில் ஈடுபகின்றனர். 

இவர்களின் சோம்பேரித் தனங்களையும், கள்ளத்தனத்தையும் மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டவும், உண்மையான தகவல்கள் சரியானமுறையில் சமூக அங்கத்தவர்களுக்கு சென்றடையவேண்டுமென்ற நோக்கிலும் இவ்வாறான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டமை எமது மக்களுக்கு கிடைத்த பெரும் வரமாகும்.

எவ்வாறு தகவல்களை அறிவதென்றால்.....

கீழே காணப்படுகின்ற “கிளிக்” எனும் லிங்கை கிளிக் செய்வதனூடாக குறித்த படிவத்தை பெற்று அதனை சரிவர நிறப்பியபின்னர் அப்படிவத்தை “பிரதேச செயலாளருக்கு”  பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவேண்டும். அதன்பின்னர் உங்களது படிவம் சென்றடைந்தமைக்கான பதில் 14 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு கிடைக்கவேண்டும். அடுத்து வருகின்ற 14 வேலை நாட்களுக்குள் உங்களது கேள்விளுக்கான தகவல்களை குறித்த பகுதியினர் அனுப்பிவைக்கவேண்டும். எல்லாமாக 28 வேலை நாட்களுக்குள் உங்களின் படிவத்துக்கான முழுத் தகவல்களும் கிடைக்கவேண்டும். இதுவே முறை.


மேலதிக தகவல்.....

இலங்கையைப் பெறுத்தவரை 1996ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் கோரிக்கையானது 2001ஆம் ஆண்டு சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை. அதன்பின்னர் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்துவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் அது தொடர்பான கவனம் ஏற்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது.

2016ஆம் ஆண்டு மார்ச்/ஜுன் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்து சட்டமாக உருவாக்கினார். பின்னர், இச்சட்டமானது முழுமையாக கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




விண்ணப்ப படிவத்துக்கு இங்கே கிளிக் செய்க!


மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்க!

மேலதிக தகவல்

கசடறக் கற்க!

Wednesday 16 August 2017

சமுர்த்தியும் செல்வந்த ஏழைகளும்....

இன்று எமது கிராமத்திலே வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமூர்த்திக் கொடுப்பனவுகளை அவ் ஏழைகள் அனுபவிப்பதைவிட செல்வந்தர்களும், செல்வாக்கு உள்ளவர்களும், காக்கா பிடிப்பவர்களுமே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை!!

இவ்வாறு இலங்கை முழுவதுமே அலசிப்பார்த்தால் வசதிபடைத்த ஏழைகள்தான் அதிகமாக இதனை அனுபவிக்கின்றனர்... இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலேயே அரசாங்கம் இத்திட்டத்தினை சட்டத்தின் வரையறைக்குள் முழுமையாக கொண்டுவர முனைந்து பல தகவல்கள் அடங்கிய விதிமுறைக்கோவை ஒன்றைத் தயாரித்து நாடு முழுவதிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இது பல வழிகளில் சாதகமாக இருந்தாலும் சில அப்பாவி மக்களும் பாதிப்படைகின்றனர்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருந்து பொருத்தமான மக்களுக்கே இச் சமுர்த்திக் கொடுப்பனவுகளைக் கொடுக்கவேண்டும். இதில் பாரபட்சம் காட்டாது தமக்குத் தெரிந்தவர்கள், செல்வாக்குள்ளவர்கள் என்று பாராது ஏழைகளின் சொத்துக்களை அவர்களுக்கே சென்றடையுமாறு தமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது சாலச் சிறந்தது.

இன்னும் சிறிது நாட்களில் எமது ஊரில் யார் யாருக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன என்ற தகவல்களையும் இந்த இணையத்தளத்தில் பதிவிட முனைகின்றேன்......(தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில்)

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்திக் கொடுப்பனவு சம்மந்தமாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அடங்கிய சட்டக்கோவை












நன்றி