Saturday 23 December 2017

அறபா வட்டாரமும், வாக்காளர் நிலையும்.....


எதிர்வருகின்ற 2018ஆம் வருடம்  உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதில் அட்டாளைச்சேனையின் வட்டாரங்களில் அதிகம் போட்டிமிக்க வட்டாரமாகவும், அதிகமாக பேசப்படும் வட்டாரமாகவும் அறபா வட்டாரம் திகழ்கிறது. (இது அட்டாளைச்சேனையின்  1 , 8 , 10 ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கியது.)

இப்போட்டிமிக்க சூழ்நிலைக்கு முக்கிய காரணம், அங்கே தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்ற மூன்று கட்சி வேட்பாளர்களே!! அதிலும் குறிப்பாக தமீம் ஆப்தீன், அப்துல் முனாப் ஆகியோர் கடந்தகாலங்களில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு பல சேவைகளை செய்தவர்கள். மூன்றாமவர் தேசிய காங்கிரஸில் புதிதாக போட்டியிடுகின்ற திருமதி ஹமீட் அவர்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னால் பிரதேசசபை உறுப்பினராக இருந்த திரு. அப்துல் முனாப் (All D ) அவர்கள் தற்போது “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலே” மயில் சின்னத்தில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஆரம்பகால போராளியான தமீம் ஆப்தீன் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வகுத்துள்ள யானை சின்னத்திலே போட்டியிடுகின்றார்.



இவ் அறபா வட்டாரத்தைப் பொருத்தவரை SLMC மீது விரக்தி கொண்டவர்கள் UPA வேட்பாளருடனும், SLMC & UPA மீது எதிர்ப்பு கொண்டவர்கள் NC யுடனும் இணைந்திருக்கின்றபோதும் SLMC யின் ஆரம்ப போராளிகளும், குறித்த வேட்பாளர்மீது அதீத அன்பு கொண்டவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸிலேயே நிலைத்திருக்கின்றனர். ஆயினும் இன்னும் சிலர் கட்சிகளின் மீதும் வேட்பாளர்கள் மீதும் விரக்தி கொண்டு தேர்தலை புறக்கணிக்க  தயாராகவுள்ளனர்.

இவ் அறபா வட்டாரத்தின் தற்போதைய கள நிலவரங்களைப் பார்த்தால்.....

SLMC   45  வீதமான ஆதரவும்

UPA      30   வீதமான ஆதரவும்

NC      15  வீதமான ஆதரவும்

Other 10 வீதமானோர் எந்தக்கட்சியும் வேண்டாம் என்ற விரக்தி நிலையிலும் உள்ளனர்.

இத் தேர்தலைப் பொருத்தவரை பெண்களும் முன்னுரிமைப் படுத்தப்படுவதனால் தே.கா. வேட்பாளர் தெரிவுசெய்யப்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

எதிர்வருகின்ற நாட்களில் இக்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரத்தினாலும் அவர்கள் வாக்காளர்களோடு நடந்துகொள்கின்ற முறையினாலும், சமூகத்திற்கு செய்கின்ற சேவையினாலும் இவ் ஆதரவு நிலை மாற்றமடையலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.......

- நான் பொதுவானவன் -


Sunday 17 December 2017

வெட்டப்படுகின்ற விழுதுகள்....

தேர்தல் வந்துவிட்டாலே வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் பின்னர் திக்குமுக்காடுவதுமே பல அரசியல்வாதிகளுக்கு வழக்கமாகிவிட்டது......  



பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வியர்வையில் சம்மாந்துறையின் தொழுவத்தினுள்ளே SLMCயின் விதையிடப்பட்டு.... காத்தான்குடியிலே துளிர்விட்டு......  கல்முனையிலே விருட்ஷமாகி......  சாய்ந்தமருது தொடக்கம் பொத்துவிலையும் தாண்டி விழுதுகள் பரப்பி.....  பல பிரதேசங்களுக்கு நிழல்கொடுத்து...... வீரத்தோடு தமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் கட்சி..... 

இன்றறைய SLMCயின் தலைமையில்..... விழுதுகள் பல வெட்டப்பட்டு......  கிளைகள் பல ஒடிக்கப்பட்டு.....  துளிர்கள் எல்லாம் கிள்ளியெறியப்பட்டு..... மரம் மட்டும் சக்தியற்ற ஒருசில கிளைகளுடன் தனியே நிற்கிறது..... இதுதான்  இன்றைய தலைமையின் சாணக்கியம்!!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் SLMC தலைவரின் வேண்டுகோளை அட்டாளைச்சேனை மக்கள் செவ்வனே நிறைவேற்றியதன் பரிசு இன்றைய ஏமாற்றம்!! வழமையாக மக்கள் அரசியல்வாதிகளிடம் ஏமாறுவதும் பின்னர் பின்னால் செல்வதும் வழக்கமாகிவிட்டதை நன்கு அறிந்துகொண்ட அரசியல்கட்சி தலைமைகள் இன்று ஊரையே ஏமாற்றும் படலங்களை ஆரம்பித்துவிட்டனர் என்பதுதான் வேதனை....

தமது 5 வருட ஆட்சிக்காலத்தில் 4 வருடங்களுக்கு மேலாக மக்கள் எதற்காக தங்களை தேர்தெடுத்தார்கள் என்ற நோக்கத்தை மறந்து...... சேவைகளை மறந்திருந்து..... சுகபோக வாழ்வில் களிப்படைந்து.... இறுதிக்கட்ட சில மாதங்கள் மட்டும் ஆங்காங்கே கண்துடைப்புக்காக ஒருசில வேலைகளைச் செய்துவிட்டு அடுத்த தேர்தலுக்கு தயாராகின்றனர்.... இதுதான் இன்றைய ஒருசில கட்சிகளின் நிலையும்...... அரசியல்வாதிகளின் நிலையும்.....  மக்களின் அவலமும்......


இதனை மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்!!

எமது ஊரைப் பொருத்தளவில்......
காலங்கடந்தபின்பு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைப்பதால் மக்களுக்கு எந்தவிதமான பலனுமில்லை என்பதை அறிந்திருக்கின்ற தலைமை இத்தனை காலமும் இழுத்தடிப்பிலேயே காலத்தை நகர்த்திச் செல்கின்றது..... 
இதுதான் சாணக்கியமா?

ஆனால்.....

தேசியப்பட்டியல் தருவதாக எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்காமல் தேர்தல் கேட்டு தோற்றுப்போன நபருக்கு தே.பட்டியல் கொடுத்திருக்கின்ற தலைமை...... அரசியல் அநாதையாக்கப்பட்ட எமது ஊரிலே உறுதிமொழி வழங்கி இன்றுவரை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் கட்சிக்கும் தலைமைக்கும் கேவலம்!! 



எனவே....
கட்சிக்காக மக்கள் அல்ல! மக்களுக்காகவே கட்சி!! என்பதனை ஒவ்வொரு கட்சித்தலைவரும் உணர்ந்து செயற்படவேண்டும்!!


- நான் பொதுவானவன் -